அன்பு முகைதீன்:

பிறந்த இடம்: கல்முனைக்குடி, மட்டக்களப்பு (20.03.1940)
 

படைப்பாற்றல்: கவிதை

படைப்புக்கள்:

  • நபிகள் வாழ்வில் நடந்த கதைகள்
  • அண்ணல் நபி பிறந்தார்
  • மாதருக்கு வாழ்வளித்த மகான்
  • மாதுளம் முத்துக்கள்
  • புதுப்புனல்
  • எழுவான் கதிர்கள்
  • அழகிய முழு நிலா

விருதுகள்:

  • முதலாமிடம் - பேச்சுப் போட்டி – ஆசிரிய கலாசாலை
  • முதலாமிடம் தங்கப்பதக்கம் - நாவன்மைப் போட்டி – தேசிய மட்டத்தில் நடைபெற்ற ரி.பி. ஜாயா அவர்களின் நினைவு தினம் - 1966
  • முஸ்லிம் கலாசார அமைச்சு அகில இலங்கை ரீதியில் நடாத்திய கவிதைப் போட்டி – முதலாமிடம்
    -
    1980
  • இலங்கை இலக்கியப் பேரவையின் சிறந்த நூலுக்கான பரிசும் சான்றிதழும் - மாதுளம் முத்துக்கள்
  • முஸ்லிம் எழுத்தாளர் கவுன்சில் பொற்கிழி – மாதுளம் முத்துக்கள்
  • கவிச்சுடர் விருதும் பொற்கிழியும் - பிரதேச அபிவிருத்தி அமைச்சர் செ.இராசதுரை – 1987
  • கவித் தாரகை என்னும் பட்டம் - முஸ்லிம் சமய பண்பாட்டு அமைச்சு – 1992
  • ஆளுநர் விருது – வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு – 2000

இவர்பற்றி:

  • இவர் 1960 களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் உரை, கவிதைப் பொழிவு, கவியரங்குகள் என பல நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியுள்ளார். இவரது வானொலி நிகழ்ச்சிகளில் 'நாட்டார் கவிநயம்', 'மகரந்தம்' என்பன குறிப்பிடத்தக்கன. இவர் கல்முனை ஸாஹிறாக் கல்லாரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். ரூபவாஹினியில் 1994 இல் உதயம் என்ற நிகழ்ச்சியை தொகுத்தளித்தவர். புகழ்பெற்ற கவிஞர், சிறந்த மேடைப் பேச்சாளர்.